பிரபாவுக்கு மட்டும்தான் காதல் வருமா?, சீமானிடம் ஒரு கேள்வி!! – வித்தி
புலம்பெயர்ந்த தமிழர்களை கவர்வதற்காகவே தமிழகத்தில் அவ்வப்போது சினிமாக்கள் தயாரிக்கப்படுவதுண்டு.அந்த வகையில்தான் அண்மையில் வெளிவந்த ராமேஸ்வரம் திரைப்படமும் எடுக்கப்பட்டது.ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு அகதியாக வரும் இளைஞன் ஒருவன், தமிழகத்து பண்ணையார் ஒருவரின் மகளைக் காதலிப்பதாக அந்த திரைப்படத்தின் கதை நகர்கின்றது.படத்தில் இன்னுமொரு சிறப்பு பிரான்சில் வாழும் புலம்பெயர் தமிழ் இளைஞன் ஒருவனே அந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்தது. படம் தமிழகத்தில் சுமாராக ஓடிக் கொண்டிருக்கின்றது. இவையெல்லாம் உங்களில் பலருக்கு தெரிந்தவை தான்.ஆனால் பிரபல திரைப்பட இயக்குனரான சீமான் அவர்கள் அந்தப் படத்தை கடந்த வாரம் விமர்சித்திருக்கிறார்.கனடாவில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழாவுக்கு சென்று விட்டு தாயகம் திரும்பிய அவர் ராமேஸ்வரம் திரைப்படம் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.அவரது கவலை என்னவென்றால், ஈழத்து அகதி இளைஞன் ஒருவன் தமிழக பண்ணையாரின் மகளை எப்படிக் காதலிப்பதாக காட்டமுடியும் என்பதுதான்.அகதியாக வந்தவர்களின் உள்ளத்தில் தாயகத்தக்கு எப்போ திரும்புவோம் என்ற ஏக்கம் தான் நிறைந்திருக்கிறது, அந்த ஏக்கங்களைத்தான் திரைப்படங்களில் பதிவுசெய்யவேண்டும், அதைவிடுத்து அவர்களது எண்ணத்தில் காதல் எல்லாம் வராது என்பதுதான் சீமானின் கோபத்துக்கு காரணம்.உண்மைதான் ஒவ்வொரு அகதியின் மனத்திலும் எப்போது தாயகம் திரும்புவோம் என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கின்றது அதற்காக அவனுக்கு காதல் உணர்வே இல்லை என்று வாதிடுவது சரியாகத் தெரியவில்லை. பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சீமான் கனடாவுக்குச் சென்றிருந்தார். அந்தப் பிரபாகரன், ஒரு போராளியாக, ஒரு போராடும் இயக்கத்தின் தலைவனாக தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த போது தான் காதல் வசப்பட்டார். அதுவும், ஒரு பெண்ணின் விருப்பமில்லாமலே அவளை தான் காதலித்தார்.அந்தப் பிரபாகரக்கே காதல் உணர்வு ஏற்படமுடியும் என்றால், சாதாரண அகதி இளைஞன் ஒருவனுக்கு ஏற்படக்கூடாதா என்ன?புலிகளிடம் வாங்குகின்ற பணத்திற்கு எதையாவது செய்யவேண்டும் என்றால் அதற்காக இப்படியெல்லாம் கூறி புலித் தலைவரையே அவர் சங்கடப்படுத்தலாமா?
Thanks…THENEE