இங்கிலாந்தில் இன வெறியால் வாலிபர் கைவிரல் துண்டிப்பு…!!
Read Time:1 Minute, 24 Second
இங்கிலாந்தில் சவுத் யார்க்ஷிர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆசிய கண்டத்தின் ஒரு பகுதியை சேர்ந்த 31 வயது மதிக்க தக்க வாலிபர் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வெள்ளைக்காரர்கள் இவரை சரமாரி அடித்து உதைத்தனர். அவர்களில் ஒருவன் திடீரென தான் வைத்திருந்த இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்தான். ஆள் காட்டி விரலை வெட்டி துண்டித்து விட்டு தப்பி ஓடிவிட்டான்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விரல் துண்டிக்கப்பட்ட வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் போது வெள்ளைக்கார வாலிபர்களுக்கும், தனக்கும் தகராறு ஏற்பட்டதாக அவர் கூறினார்.
தன் மீது இன வெறி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான வீடியோ மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating