ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்: 70 பேர் பலி..!!
Read Time:1 Minute, 7 Second
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கிழக்கு பகுதியில் மக்கள் நடமாட்டமுள்ள மார்க்கெட் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 38 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் அடுத்த தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்கல் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் நடைபெற்றது.
இந்த இரு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 70 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக, அதனுடன் இணைந்த ஆமக் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Average Rating