மிரள வைக்கும் கவர்ச்சியில் அஞ்சலி! -மனசு நிறையும் மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!
கற்றது தமிழ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘பெற்றது மனசு’ என்று ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்தார் அஞ்சலி. நேரிலும், தபாலிலும் ரசிகர்கள் இவரிடம் கேட்கிற ஒரே கேள்வி, ‘கவர்ச்சியாக நடிக்கக் கூடாதா?’ அவர்களுக்கெல்லாம் ‘சீக்கிரம் நடிப்பேன். என்ற பதிலை சொல்லி வந்த அஞ்சலி, ஆயுதம் செய்வோம் படத்தில் அவர்களின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். பாடல் காட்சிகளில் இவர் காட்டியிருக்கிற தாராளம், காஸ்ட்யூமர்களையே குலை நடுங்க வைத்திருக்கிறதாம். அதேபோல், முந்தைய படத்தில் அதிகம் பேசாமல் வந்த அஞ்சலி, ஆ.செ படத்தில் அரட்டையடித்திருக்கிறாராம். சரியான வாயாடி பொண்ணு என்று ஆச்சர்யப்படுகிற மாதிரி இவருடைய காட்சிகளை அமைத்திருக்கிறார் டைரக்டர் உதயன். இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த பேரரசு படத்தை இயக்கியவர். தமிழ்சினிமாவில் அதிரடியாக களம் இறங்கி பல கோடிகளை இறைத்து வரும் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இது. அறிமுகமான முதல் படத்திலிருந்தே ஆக்ஷன் ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுந்தர் சி இந்த படத்திலும் அதே ரூட்டில்தான் போயிருக்கிறார். இயக்குனருக்கு அடுத்தபடியாக அதிகம் வேலை பார்த்திருப்பவர் தளபதி தினேஷ். இவர்தான் படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்! தலைப்புதான் ஆயுதம் செய்வோம். ஆனால் அன்புதான் சிறந்த ஆயுதம் என்பதை சொல்கிற படம் இது என்கிறார் இயக்குனர். ஆமாம்.கடைசியில் இப்படிதானே முடிக்க வேண்டியிருக்கு?