பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலி
Read Time:59 Second
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் பெஷாவர் அருகே கோகாட் என்ற ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த தற்கொலை தீவிரவாதி ஒருவன் தன் உடலில் கட்டி இருந்த வெடிபொருள்களை வெடிக்க செய்தான். இதில் 11 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 5 பேர் காயம் அடைந்தனர். பலியான அனைவரும் புதிதாக வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட ராணுவ வீரர்கள் ஆவார்கள். அவர்கள் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது தான் இந்த தாக்குதல் நடந்தது. காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.