மனை­வியின் முகத்தில் அமி­லத்தை வீசித் தாக்­குதல் நடத்­திய கணவன்…!!

Read Time:1 Minute, 33 Second

eteவீட்டில் அற்­ப­மான விட­யங்கள் தொடர் பில் இடம்­பெற்ற வாக்­கு­வா­த­மொன்­றை­ய­டுத்து கணவர் ஒருவர் தனது மனை­வியின் முகத்தில் அமி­லத்தை வீசி­ தாக்­குதல் நடத்­திய சம்­பவம் பங்­க­ளா­தேஷில் கடந்த சனிக்­கி­ழமை இரவு இடம்­பெற்­றுள்­ளது.

பிரஹ்­மன்­பா­ரியா மாவட்­டத்தைச் சேர்ந்த தானியா பர்வீன் (25 வயது) என்ற பெண்ணே இவ்­வாறு தனது கண­வ­ரான நஸ்­ருல்லால் அமில வீச்சுத் தாக்­கு­த­லுக்­குள்­ளா­கி­யுள்ளார்.

சம்­பவ தினம் இரவு 8 மணி­ய­ளவில் தொழு­கையில் ஈடு­பட அவர் தயா­ரான போதே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இதனால் அவ­ரது முகத்­திலும் உடலின் மேல் பகு­தி­யிலும் கடும் எரி­கா­யங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

வலி தாங்­காமல் அவர் கூச்­ச­லி­டு­வதை கேட்ட அய­ல­வர்கள் அவரை மீட்டு சிகிச்­சைக்­காக டாக்கா மருத்­துவ கல்­லூரி மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்தனர்.

பங்­க­ளா­தேஷில் 1999 ஆம் ஆண்­டுக் கும் கடந்த ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலப் பகுதியில் 3625 பேர் அமில வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பி டத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நால்வருக்கு அதிகமானோரை முற்சக்கர வண்டியில் ஏற்றும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!!
Next post லொறி விபத்து – ஒருவர் படுங்காயம்…!!