நீரில் மூழ்கி ஒருவர் பலி, மற்றொருவர் மாயம்…!!
Read Time:1 Minute, 10 Second
திருகோணமலை – டயிக் வீதி பகுதியிலுள்ள கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த அவர் பிறிதொரு நபருடன் கடலுக்குச் சென்ற வேளை, நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து மீட்டகப்பட்ட 69 வயதான குறித்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, காலி – மாகால்ல பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இவர் மாகால்ல பகுதியைச் சேர்ந்த 17 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சிறுவனைத் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Average Rating