இன்று வருகிறார் சர்வதேச செஞ்சிலுவை பொதுச் செயலர்…!!
Read Time:1 Minute, 22 Second
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை பேரவையின் பொதுச் செயலாளர் எல்ஹாட் சை உத்தி யோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது எல்ஹாட் சை வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் மக்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களுக்கு விஜயம் செய்து மக்களை நேரில் சந்தித்து பேச்சு நடத்துவார்.
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இலங்கை வருகின்றார். இலங்கைக்கான இந்த விஜயத்தின்போது யுத்தத் தின் பின்னரான வடக்கின் தற்போதைய நிலைமைகளை அவர் நேரில் பார்வையிட உள்ளதாகத் தெரிவிக் கப்படுகிறது.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating