ஈராக்கில் ராணுவ தலைமையகத்திற்குள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல்: மூத்த அதிகாரி படுகொலை…!!
ஈராக்கில் ராணுவ தலைமையகத்திற்குள் ஐ.எஸ். அமைப்பின் தற்கொலைப்படை தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூத்த தளபதி ஒருவரும் 5 வீரர்களும் கொல்லப்பட்டதாக ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
அன்பர் மாகாணம் ஹதிதா பகுதியில் உள்ள படைப்பிரிவு தலைமையகத்திற்குள் நேற்று இரவு தற்கொலைப்படை தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அவர்களில் ஒருவன், பிரிகேடியர் ஜெனரல் அலி அபவுட்டின் அலுவலகத்திற்குள் சென்று தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும், இதில் அலி அபவுட் மற்றும் 5 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் மற்ற மூன்று தீவிரவாதிகள், வெளிப்பகுதியில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இதில், 7 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ராணுவ சீருடையில் வந்ததாக கூறப்படுகிறது.
Average Rating