மனைவி விவாகரத்து வழக்கு போட்டதால் 3–வயது மகளை கடத்திய தந்தை…!!
கொடுங்கையூர் காந்தி நகர் 4–வது தெருவில் வசித்து வருபவர் ஜோசப். இவரது மகள் ஜான்சிராணி. இவருக்கும், பெரம்பூரை சேர்ந்த ஆரோக்கிய விமலுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் செர்லின் என்ற மகள் உள்ளாள்.
ஜான்சிராணி–ஆரோக்கிய விமல் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜான்சிராணி மகளுடன் கொடுங்கையூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். மேலும் விவாகரத்து கேட்டு கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் வேலை சம்பந்தமாக துபாயில் இருந்து ஆரோக்கியவிமல் கடந்த வாரம் சென்னை வந்தார்.
இதற்கிடையே இன்று காலை சிறுமி செர்லினை அருகில் உள்ள குழந்தைகள் பள்ளியில் விடுவதற்காக தாத்தா ஜோசப் அழைத்து சென்றார்.
அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் திடீரென சிறுமி செர்லினை கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்து ஜான்சிராணி, கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். அதில் ஆரோக்கிய விமல் உள்பட சிலர் குழந்தையை கடத்தி சென்று விட்டதாக கூறி உள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating