12 வயது சிறுமி துஷ்பிரயோகத்தின் பின் தீ வைத்து கொலை…!!

Read Time:2 Minute, 8 Second

sdfdfdfdff19 வயது இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி பின்னர் குறித்த நபரால் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சந்தேக நபரால் அந்த சிறுமி தொடர்ந்து 8 நாட்களாக இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதே போல் குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததன் பின்னர் இதனை வௌியில் சொன்னால் குறித்த சிறுமியை கொலை செய்வதாக சந்தேக நபர் அச்சுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் , துன்புறுத்தல்களை தாங்கிக்கொள்ள முடியாத சிறுமி இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து கடந்த தினத்தில் குறித்த சந்தேக நபரால் அந்த சிறுமி அவரது வீட்டிலேயே மண்ணெண்ணை ஊற்றி பற்றவைக்கப்பட்டுள்ளார்.

தீயினால் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேக நபரின் சகோதரர்கள் இருவர் மற்றும் அவரது தந்தையையும் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

எவ்வாறாயினும் , 19 வயதுடைய குறித்த சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் , குறித்த சந்தேக நபரை விரைவில் கைது செய்யுமாறு கோரி பஞ்சாப் மாநிலத்தில் பல ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி விவாகரத்து வழக்கு போட்டதால் 3–வயது மகளை கடத்திய தந்தை…!!
Next post புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய “பொதுச்சபைக் கூட்டம்”.. 28.03.2016″ அறிவித்தல்..!!