பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது…!!

Read Time:1 Minute, 51 Second

downloadபொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ மாவெலி காட்டில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த இரகசிய தகவலின்படி 01.03.2016 அன்று இரவு வேளையில் பொகவந்தலாவ பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டிருந்த 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனா்.

இந்த பகுதியில் இவர்கள் பல நாட்களாக இவ்வாறு சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்த மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவ கெம்பியன் ஓல்டி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் அட்டன் நீதவான் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய “பொதுச்சபைக் கூட்டம்”.. 28.03.2016″ அறிவித்தல்..!!
Next post மாணவியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 20 வருடங்கள் சிறை…!!