மாணவியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 20 வருடங்கள் சிறை…!!
Read Time:1 Minute, 14 Second
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரேமா சுவர்ணாதிபதி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் தீர்ப்பு வழங்கப்பட்ட வேளை சந்தேகநபர் நீதிமன்றத்தில் இல்லாது தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
2004ம் ஆண்டு பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating