மாடியிலிருந்து விழுந்த 7வயது சிறுமி சிகிச்சை பலனின்றி மரணம்…!!
Read Time:1 Minute, 18 Second
கடந்த 22.02.2016 அன்று காத்தான்குடியில் மாடியிலிருந்து கீழே விழுந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரமாக சிகிச்சை பெற்றுவந்த பாத்திமா ஸாரா எனும் 7 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று 01.03.2016 காலை 11 மணியளவில் மரணமாகியுள்ளார்.
குறித்த சிறுமி தனது வீட்டுக்கு அருகில் நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் வீட்டின் மாடி ஒன்றிலிருந்தே தவறி விழுந்து வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கிச்சை பெற்றுவந்தார்.
பாத்திமா சாரா எனும் 7 வயது சிறுமிக்கு மூளையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் சிகிச்சை பலனளிக்காத நிலையிலேயே நேற்றுமரணித்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating