முதுகுளத்தூரில் ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை..!!
Read Time:1 Minute, 18 Second
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஜி.எச். 2–வது தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியகுமார் (வயது43). ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி தேவி (55). முதுகுளத்தூர் அருகில் உள்ள மேல சிறுபோது கிராமத்தில் பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் ஒரு வாரத்துக்கு முன்பு வைர நெக்லஸ் உள்ளிட்ட 20 பவுன் நகைகளை ஒரு பையில் போட்டு வீட்டில் வைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது நகைகள் இருந்த பையை காணவில்லை.
யாரோ ‘மர்ம’ நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து ஆசிரியை தேவி, முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் டி.எஸ்.பி. கணபதி, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய ‘மர்ம’ நபர்களை தேடி வருகிறார்கள்.
Average Rating