வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகை குஷ்பு பேட்டி…!!
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று சிலர் எனக்காக மனு கொடுத்து இருக்கிறார்கள்.
அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி மேலிடம் ஆணையிட்டால் போட்டியிடுவேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர் இன்னும் முடிவை தெரிவிக்கவில்லை. காங்கிரசும் முயற்சி செய்து வருகிறது. அவர் இந்த கூட்டணிக்கு வரவேண்டும் என்பதுதான் ஆசை. வருவார் என எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரதான் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அதில் விஜயகாந்த் சேர்ந்தால் பலமாக இருக்கும். அவர் விரைவில் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
கார்த்தி சிதம்பரம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுவது குறித்து தேர்தல் பழிவாங்கும் செயல். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது வழக்கம்தான்.
அவர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்தான் அதைப்பற்றி பேசனும்.
பா.ஜனதா திட்டமிட்டு காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
‘வியாபம்’, லலித்மோடி பிரச்சினையில் பா.ஜனதாவின் நிலை என்ன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating