இயக்குனர் சாமி புகார்
மிருகம்’ படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியாவால் ரூ.25 லட்சம் கூடுதல் செலவு ஏற்பட்டதாக படத்தின் இயக்குனர் சாமி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். உயிர்’ படத்தை இயக்கிய சாமி தற்போது “மிருகம்’ என்ற இப்படத்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் அறிமுக நாயகன் ஆதி, கதாநாயகி பத்மபிரியா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியாவை இயக்குனர் சாமி கன்னத்தில் அறைந்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில் விசாரணை செய்த தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர் சாமிக்கு படம் இயக்க ஒரு வருடம் தடை விதித்தது. இந்நிலையில், நடிகை பத்மபிரியா மீது இயக்குனர் சாமி மீண்டும் ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது குறித்து சாமி கூறியதாவது: பத்மபரியா ஒரு சிறந்த நடிகை. அவர் “மிருகம்’ படத்தில் தனது நடிப்பின் முழு பரிமாணத்தையும் வெளிப் படுத்தியுள்ளார். “உயிர்’ படத்திற்கு பிறகு சங்கீதாவை “உயிர்’ சங்கீதா என்று அழைத்தது போல, இப் படத்திற்கு பிறகு “மிருகம்’ பத்மபிரியா என்று அவர் அழைக்கப்படுவார். படப்பிடிப்பின் போது ஒரு இயக்குனருக்கு கோபப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கும். அது ஒரு பெரிய விஷயமாக அவர் கூறிவிட்டார். படப்பிடிப்பின் போது பத்மபிரியாவால் கூடுதலாக ரூ. 25 லட்சம் எனக்கு செலவு ஏற்பட்டது. கதைப்படி கிராமத்து நாயகியாக நடிக்க வேண்டிய பத்மபிரியா எப்பொழுதும் ஷாம்பூ போட்டு குளித்து பளபளப்பாக காணப் படுவார். கேட்டால் கோபப்படுவார். என் மீதான தயாரிப்பாளர் சங்கம் நீக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இல்லாவிட்டால் வேற்று மொழி படங்களிலேயோ, வடமொழி களிலேயோ நான் படம் இயக்கப் போய்விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.