பெண்களிடம் கேலி: இருவர் கைது
Read Time:1 Minute, 18 Second
புதுச்சேரியில் பாட்டுப்பாடி பெண்களை கேலி செய்த இரு இளைஞர்களை போலீஸர் திங்கள்கிழமை கைது செய்தனர். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும், இளம் பெண்களையும் சிலர் பின் தொடர்ந்து சென்று சினிமா பாட்டுகள் பாடி கேலி செய்வதாக உருளையன்பேட்டை போலீஸருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவர்களைப் பிடிக்க போலீஸர் திடீர் சோதனை நடத்தினர். வில்லியனூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த வாசு மகன் ராமு என்ற ராமச்சந்திரன் (21), செல்லக்கண்ணு மகன் செல்வம் (27) ஆகிய இருவரும் பெண்களை பின் தொடர்ந்து சென்று சினிமா பாட்டுக்களைப் பாடி கேலி செய்தபோது போலீஸர் அவர்களை மடக்கிப் பிடித்தனர். உருளையன்பேட்டை போலீஸôர் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல தினமும் சோதனை நடத்த போலீஸர் ஏற்பாடு செய்துள்ளனர்.