மாணவியை தாக்கிய ஆசிரியை மீது போலீசில் புகார்…!!
Read Time:38 Second
தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் அப்துல்மஜித். இவரது மகள் அப்ரீன். அருகில் உள்ள தனியார் பள்ளியில் யு.கேஜி படித்து வருகிறாள். சரியாக படிக்காததால் ஆசிரியை அவளை தாக்கியதாக தெரிகிறது. இதில் அப்ரீனின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து அப்துல் மஜித் ஆர்.கே.நகர் போலீசில் ஆசிரியை மீது புகார் தெரிவித்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating