வேலூரில் கல்லை தூக்கி போட்டதில் தொழிலாளி தலை நசுங்கியது: சைக்கோ வாலிபரை கட்டிவைத்து அடித்தனர்…!!
வேலூர் நேதாஜி மார்க்கெட் அருகே மண்டித்தெரு இன்று காலை பரபரப்பாக இருந்தது. மதியம் சுமார் 1.30 மணிக்கு வாலிபர் ஒருவர் அங்கிருந்த மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவரை திடீரென தாக்க தொடங்கினார்.
வாலிபரின் அடிக்கு தாக்குபிடிக்க முடியாத தொழிலாளி தரையில் சாய்ந்தார். ஆத்திரத்தில் நின்றிருந்த அந்த வாலிபர் பெரிய கல்லை தூக்கி தொழிலாயின் தலையில் போட்டார்.
இதில் தலைநசுங்கி வாய், காது வழியாக ரத்தம் பீறிட்டது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். சிலர் வாலிபரை மடக்கி பிடித்து கயிற்றால் கையை கட்டினர். அப்போது வாலிபர் பொதுமக்களை தாக்க முயன்றார். இதனால் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வடக்கு போலீசார் வந்து காயமடைந்த தொழிலாளியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவரை தாக்கிய வாலிபர் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் பேசினார். அவர் சைக்கோ போல் உள்ளார். காயமடைந்தவர் மார்க்கெட்டில் மூட்டை தூக்கி வருகிறார். அவர் பெயர் விவரங்களை போலீசார் சகரித்து வருகின்றனர்.
மேலும் மோதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி நடத்தினர். இந்த சம்பவத்தால் மணடித்தெருவில் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating