பட்டப்பகலில் 15 இலட்சம் ரூபா கொள்ளை – ஜாஎலயில் சம்பவம்…!!
Read Time:1 Minute, 10 Second
ஜாஎல பிரதேசத்தில் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து கட்டுப்பணம் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 15 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பணத்தை எடுத்துச் சென்றவரிடம் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் பணத்தொகையை எடுத்துக் கொண்டு வாகனத்தில் ஏற முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கூரிய ஆயுதங்களால் பண உரிமையாளரை தாக்கிவிட்டு பணப்பையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதன்போது காயமடைந்த அவர் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை ஜாஎல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Average Rating