பொகவந்தலாவையில் 49 வயது குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை…!!
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை 10மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் தனிமையில் இருந்த குறித்த நபர் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
49 வயது மதிக்கதக்க 03 பிள்ளைகளின் தந்தையான நாராயனன் அழகப்பன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவடட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Average Rating