இஸ்ரேல் ராணுவ வீரர்மீது காரை மோதிய பாலஸ்தீனப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்…!!
Read Time:1 Minute, 0 Second
இஸ்ரேல் ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில் தங்கள் நாட்டு வீரர்கள்மீது தாக்குதல் நடத்த வந்ததாக 173 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள இஸ்ரேலிய செட்டில்மென்ட் பகுதியான குஷ் எட்சியான் என்ற இடத்தில் இன்று ஒரு ராணுவ வீரர்மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்ற பாலஸ்தீனியப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார் மோதியதில் காயமடைந்த ராணுவ வீரர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
Average Rating