திருவண்ணாமலையில் ஆசிரியர் வீட்டில் 39 பவுன் நகை – ரூ. 15 ஆயிரம் கொள்ளை..!!
திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோடு ராம மூர்த்தி நகரை சேர்ந்தவர் அமனுல்லா (வயது 45). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார்.
நேற்று பணி முடிந்து அவர் வீட்டுக்கு வந்தார். இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டனர். பின்னர் வீட்டின் மேல்மாடிக்கு சென்று தூங்கினர்.
அப்போது பக்கத்து வீட்டு மாடி வழியாக மர்ம நபர்கள் அமனுல்லாவின் வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்தனர். பின்னர் அமனுல்லாவின் கீழ் பகுதி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அதில் இருந்து 39 பவுன் நகையையும், ரூ. 15 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்தனர்.
இன்று காலை அமனுல்லாவும் குடும்பத்தினரும் எழுந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கதவும், வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், அந்த பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Average Rating