8 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற 15 வயது சிறுவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி…!!
ஆந்திராவில் 8 வயது சிறுமியை கற்பழித்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கைதான சிறுவன் பிரகாசம் மாவட்டம் ஏலூரைச் சேர்ந்தவன். துணிக்கடையில் வேலை பார்க்கிறான்.
இவனது பக்கத்து வீட்டில் 3–ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி உள்ளார். காய்ச்சல் காரணமாக சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாள். அவளை தனியாக விட்டு விட்டு பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சிறுவன் அவளை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அங்கு வைத்து சிறுமியை அவன் கற்பழித்தான். இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்தனர். அப்போது நடந்த விவரத்தை அவள் கூறினாள்.
இது அந்த பகுதி முழுவதும் பரவியது. ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சிறுவனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஏலூர் போலீஸ் டி.எஸ்.பி. கோகுல் வெங்கடேஸ்வர ராவ், இன்ஸ்பெக்டர் பங்காரு ராவ் ஆகியோர் சிறுவனை கைது செய்தனர். கற்பழிக்கப்பட்ட சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Average Rating