நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் பிணமாக மிதந்த வங்கி பெண் ஊழியர்: கொலையா? என போலீசார் விசாரணை…!!

Read Time:2 Minute, 53 Second

206503e3-1f81-4272-8b2c-51ada4050ef4_S_secvpfநெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இன்று காலை ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். அவரது உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. ஆற்றில் குளிக்க வந்தவர்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் சந்திப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இளம் பெண் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். நைட்டி அணிந்த நிலையில் இறந்து கிடந்த இளம்பெண் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

அவரது இடுப்பில் துண்டு மூலம் கல் கட்டப்பட்டிருந்தது. பிணமாக கிடந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். இன்று அதிகாலையோ அல்லது நேற்று இரவோதான் அவர் ஆற்றில் இறந்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து இளம் பெண் பிணத்தை மீட்டு போலீசார் பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் பிணமாக கிடந்தவர் யார்? அவரது பெயர் விபரம் என்ன, எப்படி இறந்தார்? ஆற்றில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது யாரும் கொலை செய்து கல்லை கட்டி ஆற்றில் வீசினார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் ஆற்றில் பிணமாக மிதந்தவர் பாளை தியாகராஜநகரைச் சேர்ந்த பரமசிவன் மனைவி புவனேஸ்வரி (32) என்பதும் அவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றியதும் தெரியவந்தது.

பரமசிவம் நெல்லை டவுனில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக புவனேஸ்வரி சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்து வந்துள்ளார். நேற்று இவர் டவுனில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் புவனேஸ்வரி ஆற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். தொடர்ந்து போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி பெண் ஊழியர் ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆம்பூர் அருகே கார்–லாரி மோதல்: டாக்டர்–மனைவி உள்பட 3 பேர் பலி…!!
Next post மஹா சிவராத்திரி தினத்தில் மதுபானச் சாலைகள் மாமிசக் கடைகள் யாவும் மூடப்பட்டுப் புனிதம் பேணப்பட வேண்டும்..!!