ஈராக்கில் உள்ள பாகுபா நகரில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலைப்படை தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

Read Time:1 Minute, 44 Second

irak.gifஈராக்கில் உள்ள பாகுபா நகரில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலைப்படை தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர். தியாலா மாகாணத்தில் உள்ள அல்அபாரா என்ற இடத்தில் ஓட்டல் ஒன்றின் உள்ளே தற்கொலைப்படையை சேர்ந்த மனித வெடிகுண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 16 பேர் கொல்லப்பட்டதாக காவல் துறை உயரதிகாரி நஜீம் அல்சுமாடே தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் மேலும் 24 பேர் படுகாயமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு சம்பவத்தில் காவல் துறை செக் போஸ்ட் மீது குண்டுகள் வைக்கப்பட்ட கார் மோதப்பட்டு வெடிக்கச் செய்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் படுகாயமடைந்ததாகவும் காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே மத்திய பாக்தாத் பகுதியில் மற்றொரு கார் குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைஸ் ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட நிலையில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மூன்று மாதங்களுக்குள் கிளிநொச்சியை கைப்பற்றி பிரபாகரனை அழிப்போம்
Next post பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சின் 16 வயதான தங்கை ஜேமி ஸ்பியர்ஸ் கர்ப்பம்