கோவை அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 2½ வயது குழந்தை பலி…!!
Read Time:1 Minute, 25 Second
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிஷ். இவர் கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று ஹரிஷ் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி உணவு சமைத்துக்கொண்டு இருந்தார். இவர்களது 2½ வயது மகன் கிரிஷ் நாயகா வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தான்.
அப்போது வீட்டு முன்பு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தான். இதனை அந்த வழியாக சென்ற ராஜிவன் என்பவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சிறுவனை மீட்டார். பின்னர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே கிரிஷ் நாயகா பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating