மகா சிவராத்திரி: பருத்தித்துறை – திருக்கேதீஸ்வரம் விசேட பஸ் சேவைகள்..!!
Read Time:45 Second
மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு நாளை மறுதினம் திங்கட்கிழமை விசேட பஸ் சேவைகளை நடத்தவுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைச் சாலை முகாமையாளர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
அன்றையதினம் காலை 7 மணி முதல் பருத்தித்துறையில் இருந்து திருக்கேதீஸ்வரத்துக்கான விசேட பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன.
இதற்கான ஆசனப் பதிவுகளை பருத்தித்துறைச் சாலையில் மேற்கொள்ள முடியும். எனவும் அவர் கூறினார்.
Average Rating