சர்வதேச நாணய நிதியத்திடம் உடனடிக் கடன்: வரி அறவீடு அதிகரிக்கும் அபாயம்..!!
அந்திய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளமை, எதிர்பார்த்த வருவாய் கிடைக்காமை மற்றும் அரச செலவுகள் பாரியளவில் அதிகரித்துள்ளமை ஆகிய ஆகிய மூன்று பிரதான பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நெருக்கடியில் இருந்து மீள அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் உடனடியான கடனை பெற தயாராகி வருவதாக தெரியவருகிறது.
குறிப்பாக அந்நிய செலாவணி கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்திடம் உடனடியான கடனை பெற அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதற்காக நாணய நிதியம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த நிபந்தனைகளுக்கு அரசாங்கம் முழுமையாக இணங்கியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவி்க்கின்றனர். இதனடிப்படையில், விரைவில் வரி அறவீடுகள் அதிகரிக்கப்பட உள்ளதுடன் அரச நிவாரணங்கள் பாரியளவில் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating