டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்: காதலியை விபசார கும்பலிடம் விற்ற வாலிபர்; 3 பேர் கற்பழித்த கொடூரம்
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது பெண் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது அக்காள் டெல்லியில் கணவருடன் வசித்து வந்தார். அவர் கர்ப்பமாக இருந் தார். எனவே அவருக்கு உதவு வதற்காக சாந்தினி டெல்லி வந்து தங்கினார். அப்போது ஆதர்ஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெய் சங்கர் என்ற வாலிபர் சாந்தினியை சந்தித்தார். அவரை காதலிப்பதாக கூறினார். இதை உண்மை என நம்பிய சாந்தினி ஜெய்சங்கரை காதலித்தார். இருவரும் அடிக் கடி தனியாக சந்தித்து பேசிக் கொண்டனர். கடந்த 12-ந்தேதி ஜெய்சங்கர் சாந்தினியை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்து சென்றார். ஆனால் தனது வீட்டுக்கு அழைத்து செல்லாமல் அவருடைய நண்பர் பர்வீஷ் என்ப வர் வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் இருவரும் சேர்ந்து சாந்தினியை ஒரு விபசார கும்பிடம் விற்றனர். இதற்காக ரூ.40 ஆயிரம் பணம் வாங்கி கொண்டனர். விபசார கும்பலில் ஜக்பீர், ராஜ்பாலா என்ற கணவன்- மனைவி இருந்தனர். அவர்கள் சாந்தினியை அங்கிருந்து கடத்தி சென்றனர். பின்னர் விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்தினர். ஆனால் சாந்தினி மறுத்தார். எனவே அவரை 3 வாலிபர்களை விட்டு கற்பழிக்க செய்தனர். அவர்கள் 3 பேரும் மாறி மாறி கற்பழித்தனர். இதற்கிடையே சாந்தினியின் அக்காள் கணவர் சாந்தினி காணாமல் போனது பற்றி போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் விசாரணை நடத்தி ஜெய்சங்கர் அவரை விபசார கும்பலிடம் விற்று இருப்பதை கண்டு பிடித்தனர். சாந்தினியை அவர்களிடம் இருந்து மீட்டார்கள். ஜெய்சங்கர், பர்வீன் மற்றும் விபசார கும்பல் தம்பதி ஜக்பீர், ராஜ்பாலா ஆகியோரை கைது செய்தனர்.