குழந்தை கொலை தொடர்பில் 18 வருடங்களின் பின் பெண் ஒருவர் கைது..!!
Read Time:1 Minute, 22 Second
குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்தமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட பெண் ஒருவர் 18 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோடைகாவற்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி குழந்தை கொலை தொடர்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
குறித்த பெண் பிணையில் விடுதலையான பின்னர் தலைமறைவாகியுள்ளார்.நீதி மன்றின் பிடியாணைக்கு அமைவாக 18 வருடங்களின் பின்னர் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக அறியவந்துள்ளது.
ஹம்பாந்தோடை நீதவான் நீதிமன்றத்தினால் மீண்டும் குறித்த பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Average Rating