சர்வதேச மகளிர் தினம்..!!
வடமாகாண சுகாதார அமைச்சின் மகளிர் விவகார பிரிவினரால் சர்வதேச மகளிர் தினம் எதிர்வரும் 9ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி. விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் உட்பட கௌரவ விருந்தினராக யாழ். இந்தியத் துணைத்தூவர் ஆ.நட்ராஜன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் ‘நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள்’ என்ற தலைப்பில் கோகிலா மகேந்திரனும் ‘பெண்கள்’ என்ற தலைப்பில் பி.எஸ். அஜிதாவும் சிறப்புரையாற்றவுள்ளனர்.
அத்துடன் மகளிர் விவகாரக் குழுவினரால் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் வெற்றியீட்டிய குறுடம்படங்கள் திரையிடப்படுவதுடன் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
Average Rating