சீனாவில் ஒரு மாதத்துக்கு முன்னர் லிப்ட்டுக்குள் சிக்கிக்கொண்ட பெண்ணின் பிணம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு…!!

Read Time:1 Minute, 48 Second

f6d1698e-1ba9-48d7-9cc3-044955ebf1fb_S_secvpfசீனாவின் காவ்லிங் மாவட்டத்தின் க்சியான் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருக்கும் ஒரு லிப்ட்டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி வந்த பணியாளர்கள், பெரிய கோளாறு ஏற்பட்டிருப்பதாக கூறி, அதை சரிசெய்யும்வரை அதே கட்டிடத்தில் உள்ள மற்றொரு லிப்ட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறிச் சென்றனர்.

கடந்த முதல்தேதி தேவையான உதிரிபாகங்களுடன் மீண்டும் அங்குவந்த பணியாளர்கள் லிப்ட்டை திறந்து பார்த்தபோது உள்ளே சுமார் 43 வயது மதிக்கத்தக்க ஒருபெண்ணின் அழுகிய பிரேதம் கிடந்துள்ளது.

அதே கட்டிடத்தில் தனியாக வசித்துவந்த அந்தப் பெண் கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி பழுதான லிப்ட் வழியாக கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, உள்ளே அவர் இருப்பதை அறியாத லிப்ட் மெக்கானிக்கில் ஒருவர் திடீரென்று மின் இணைப்பை துண்டித்து விட்டுள்ளார்.

லிப்ட்டுக்குள் கிடந்து கத்திக்கத்தி, அந்தப் பெண் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என கருதும் போலீசார், இந்த அஜாக்கிரத்தைக்கு காரணமான லிப்ட் நிறுவனப் பணியாளர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாரடைப்பைத் தவிர்க்க தேநீர் அருந்துங்கள்..!!
Next post 2021–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு சீன விண்கலம்…!!