இளம்பெண் கற்பழிப்பு வழக்கு; சாட்சி சொல்ல இருந்த பெண் மீது தாக்குதல்; தந்தை – மகன் கைது

Read Time:1 Minute, 54 Second

சேலம் அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் சாந்தி (வயது 19). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு கம்ப்ட்டர் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு சாந்தியை சகோதரர் முறை கொண்ட முருகன் என்ற வாலிபர் வலுக்கட்டாயமாக கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காரி பட்டி போலீசில் புகார் செய் யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் கற்பழிக்கப்பட்ட சாந்தியின் அக்கா பெரியம்மாள் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் கோர்ட்டில் சாட்சி சொல்ல தயாராக இருந்தார். இதனை அறிந்த முருகனின் உறவினர் அர்ஜ×னன் (50) மற்றும் அவரது மகன் சக்திவேல் (27) ஆகியோர் பெரியம்மாளை முருகனுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று மிரட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த பெரியம்மாள், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி வழக்கு பதிவு செய்து சாட்சி சொல்ல இருந்த பெண்ணை தாக்கிய தந்தை – மகன் இருவரையும் கைது செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாகிஸ்தானில் ரெயில் கவிழ்ந்தது; 50 பேர் பலி
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…