கராச்சியில் நாசவேலையில் ஈடுபட இருந்த தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!
Read Time:1 Minute, 4 Second
கராச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அல் கொய்தா மற்றும் லஷ்கர்-இ-ஜாங்வி அமைப்பைச் சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கராச்சி நகரின் ஷபூரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து கராச்சியில் தாக்குதல் நடத்த தி்ட்டமிட்டிருப்பதா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
இதற்கு போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் தீவிரவாதிகளின் பெரிய தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
Average Rating