ஈராக்கில் சோதனை சாவடியில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 29 பேர் பலி..!!
Read Time:1 Minute, 21 Second
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சோதனைச் சாவடி ஒன்றினை குறி வைத்து நடைபெற்ற கார்வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 29 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஹில்லா பகுதியில் மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குத்லில் சுமார் 47 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சுமார் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹில்லா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இதே பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு ஹில்லா நகரின் சோதனை சாவடி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 150 பேருக்கும் மேலானோர் படுகாயமடைந்தனர்.
Average Rating