குடிபோதையில் வந்ததால் கணவரை கொலை செய்த மனைவி..!!
Read Time:1 Minute, 7 Second
நிட்டம்புவ ஒர்ச்சன்ட் பிரதேச வீடொன்றினுள் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 37 வயதான நபராவார்.
தான், தனது கணவரின் தலைக்கு இரும்பு கம்பியினால் தாக்கி அவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட பெண், காவற்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு காரியாலயம் தெரிவித்துள்ளது
குடி போதையில் வீட்டுக்கு வந்ததால், தான் இவ்வாறு கணவரை தாக்கி கொலை செய்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
Average Rating