சிவன் கோயிலில் பாறை விழுந்து 3 பக்தர்கள் உடல் நசுங்கி பலி…!!
Read Time:54 Second
சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள -சின்ட்வாரா மாவட்டத்தின் ஹராய் நகர்புறத்தில் இருக்கும் ஒரு குகைக்கோயிலில் இன்று பக்தர்கள் வழிபாடு செய்துகொண்டிருந்தபோது அந்த குகையின் மேற்கூரையில் இருந்த பாறையின் ஒருபகுதி பெயர்ந்து பக்தர்கள் மீது விழுந்தது.
இதில் டாலி பாண்டே, நிகிதா பாண்டே, சர்தீப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Average Rating