மகள் திருமண விழாவில் உற்சாக துப்பாக்கிச் சூடு: போலீஸ் கான்ஸ்டபிள் பரிதாப பலி…!!

Read Time:1 Minute, 42 Second

70f95579-2e32-4c38-a7b4-0a99f1e87cdb_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் வசதி படைத்த செல்வந்தர்களின் திருமண விழாக்கள் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் வெற்றி ஊர்வலங்கள் போன்றவற்றில் சிலர் உற்சாக மிகுதியில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வேடிக்கைக்காக நடத்தப்படும் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு வழிப்போக்கர்களான அப்பாவி மக்கள் சிலர் காயமடைவதும், உயிரிழப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால், உத்தரப்பிரதேசம் மாநிலம், மணிப்புரி மாவட்டத்தில் உள்ள போகான் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் உற்சாகமிகுதியில் ஒருவர் வானத்தை நோக்கி சுட்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மணமகளின் தந்தை குண்டுபாய்ந்து உயிரிழந்தார்.

பலியான ராஜேந்திர சிங்(45) அருகாமையில் உள்ள படவுன் மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் உள்ளூர் போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவன் கோயிலில் பாறை விழுந்து 3 பக்தர்கள் உடல் நசுங்கி பலி…!!
Next post தந்திரமாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற பெண்..!!