பாகிஸ்தான் கோர்ட்டில் தற்கொலைப்படை தாக்குதல் – 8 பேர் பலி…!!
Read Time:1 Minute, 0 Second
வடமேற்கு பாகிஸ்தான், கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள சர்சாடா மாவட்ட கோர்ட்டில் இன்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் உடல் சிதறி பலியாகினர்.
இன்று காலை நீதிமன்றம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த வேளையில் உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி ஷப்கடார் வட்டார கோர்ட் வளாகத்துக்குள் நுழைய முயன்ற ஒரு தீவிரவாதியை அங்கு காவலுக்கு நின்ற பாதுகாப்பு படையினர் மடக்கி சோதனையிட்டனர். அப்போது, திடீரென பொத்தானை இயக்கி அவன் வெடித்து சிதறினான்.
இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உள்பட 8 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Average Rating