ஊழல் வழக்கில் ஈரான் கோடீசுவரருக்கு மரண தண்டனை..!!
Read Time:57 Second
ஈரானை சேர்ந்தவர் பாபக் சஞ்சானி (41). எண்ணை ஏற்றுமதியாளரான இவர் கோடீசுவரர் ஆவார். இவர் முன்னாள் அதிபர் முகமது அகமதின் ஜாத் ஆட்சி காலத்தில் எண்ணை ஏற்றுமதியில் வங்கி கணக்கில் மோசடி செய்தார்.
இதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வரை ஊழல் செய்தார். எனவே, இவர் மீது மோசடி மற்றும் பொருளாதார குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இவர் உள்பட 3 பேருக்கு கீழ்கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.
அங்கு அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பேருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படவில்லை.
Average Rating