5 மணி நேரம் விசாரணை நடத்தியும் நடிகை காவேரி-வைத்தி பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை விசாரணை தள்ளி வைப்பு

Read Time:4 Minute, 33 Second

kaaveri.jpgசென்னை, ஐகோர்ட்டில் உள்ள சமரச தீர்வு மையத்தில் 5 மணி நேரம் விசாரணை நடத்தியும், நடிகை காவேரி-வைத்தி பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை. விசாரணை அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காவேரி புகார் சினிமா ஒளிப்பதிவாளர் வைத்திக்கும், எனக்கும் திருமணம் நடந்தது என்றும், அதை மறைத்துவிட்டு வைத்தி 2-வது திருமணம் செய்ய முயற்சித்துள்ளார் என்றும், நடிகை காவேரி போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து வைத்திக்கும், அவரது மாமா மகளுக்கும் கீரனூரில் நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வைத்தி தலைமறைவானார். இந்த புகார் தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்தால் முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். காவேரிக்கும், தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்றும், சினிமாத்துறையில் வளர்ந்து வரும் தன்னை பழிவாங்கும் நோக்குடன் வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்துள்ளார் என்றும் வைத்தி தனது மனுவில் கூறியிருந்தார்.

சமரச தீர்வு மையம்

வைத்தி தாக்கல் செய்த மனுவோடு, தன்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று காவேரி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி எனக்கும், வைத்திக்கும் சென்னை, மேற்கு முகப்பேரில் உள்ள எங்கள் வீட்டில் வைத்து திருமணம் நடந்தது என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

ஆனால், 2-வது திருமணம் செய்ய அவர் முயற்சித்துள்ளார் என்றும், அவருடைய குடும்பத்தினர் அவரை தற்போது சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆகவே, எனது பிரச்சினையை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி வைத்து இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த மனுக்களை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்து, இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இருவரும் ஐகோர்ட்டில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.

தீர்வு ஏற்படவில்லை

சமரச தீர்வு மையத்தில் இருவரும் ஏற்கனவே இருமுறை ஆஜரானார்கள். இவர்களிடம் 33/4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 3-வது கட்ட விசாரணைக்கு நேற்று முன்தினம் இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜரானார்கள். சமரச தீர்வாளர்கள் ஜவாத், உமா ராமநாதன் ஆகியோர் இருவரையும் சேர்த்தும், தனித்தனியாகவும் விசாரித்தார்கள். ஒரு மணி நேரம் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 3 கட்டமாக இதுவரை சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தியும், இவர்களது பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை.

இதனால், 4-வது கட்ட விசாரணைக்கு அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் இருவரும் ஆஜராகவேண்டும் என்று சமரச தீர்வு மையம், காவேரிக்கும், வைத்திக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த சமரச தீர்வு மையத்தில் ஏற்படும் முடிவை பொறுத்துத்தான் வைத்திக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? இல்லையா? என்பது தெரிய வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாறுமாறாக காரை ஓட்டியதில் 3 பேர் இறந்த சம்பவம் காரை ஓட்டிய சிறுவன் கோர்ட்டில் சரணடைந்தார் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவு
Next post கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் டாக்டர் சாமியாருக்கு 3-வது மனைவி ஆனார் போலீசில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம்