கடனை அடைக்க பேஸ்புக் மூலம் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்க முயன்ற கணவர்..!!

Read Time:1 Minute, 39 Second

timthumbமத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் மாலி (வயது 30). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் ஆனது. திருமணத்துக்கு பிறகு, மனைவியுடன் இந்தூரில் குடியேறினார். அவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திலீப், எத்தனையோ பேரிடம் கடன் வாங்கி, திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். கடன் கொடுத்தவர்களின் தொல்லை தாங்காமல், சொந்த கிராமத்துக்கு சென்று விட்டார்.

அவருடைய மனைவி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.இந்நிலையில், கடனை அடைப்பதற்காக, தன் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்க தயாராக இருப்பதாகவும், விருப்பம் உள்ளவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் ‘பேஸ்புக்’கில் தனது செல்போன் எண்ணுடன் திலீப் மாலி விளம்பரம் செய்தார். மனைவி புகைப்படத்தையும் வெளியிட்டார்.

உறவினர்கள் மூலம், இந்த விளம்பரத்தை பற்றி அறிந்த திலீப் மாலியின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். உடனே, போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான திலீப் மாலியை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சில சுவையூட்டிகளை தடைசெய்ய நடவடிக்கை..!!
Next post வல்வெட்டித்துறை மாணவி வல்லுறவு! வழக்கின் தீர்ப்பு இந்த வாரம்..!!