வல்வெட்டித்துறை மாணவி வல்லுறவு! வழக்கின் தீர்ப்பு இந்த வாரம்..!!
வல்வெட்டித்துறையில் மாணவி ஒருவர் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் விசாரணைகள் முடிவடைந்துள்ளன. சட்டத்தரணிகளின் தொகுப்புரைகளும் முடிவுற்ற நிலையில் தீர்ப்பு இந்த வாரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடப்பட்டிருந்தார்.
பிணையில் சென்ற சந்தேக நபர், நாட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவில் தலைமறைவானார். இதையடுத்து எதிரி இல்லாமலேயே அவருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இந்த வழக்கில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு விசாணைகள் முடிவுற்றதையடுத்து, இந்த வாரம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating