மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின் உடல் மா ஓயாவில் மீட்பு..!!
Read Time:47 Second
மாவனெல்லை – கிரிங்கதெனிய பிரதேசத்தில் மா ஓயாவில் இருந்து நேற்று மீட்கப்பட்ட சடலம் கல்வதுர பிரதேசத்ததை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
இவர் கடந்த மார்ச் 2ம் திகதி விஷம் அருந்திய நிலையில் மாவனெல்லை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து, மார்ச் 5ம் திகதி இவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையிலேயே இவரின் சடலம் மா ஓயாவில் இருந்து மீ்ட்கப்பட்டுள்ளது.
Average Rating