தந்தை இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை…!!
Read Time:40 Second
கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம் 4–வது தெருவில் வசித்து வருபவர் சக்திவேல் (வயது 38). தொழிலாளி இவரது தந்தை கடந்த 4 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் சக்திவேல் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating