மலேசிய விமானம் மாயமான இரண்டாம் ஆண்டு நினைவு தினம்: உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி…!!

Read Time:1 Minute, 39 Second

7b42daae-9896-44f5-a726-b1986dc54a4e_S_secvpfகடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் 239 பேருடன் மலேசிய விமானம் மாயமானது. இந்த துயர நிகழ்வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8–ந் தேதி புறப்பட்டு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 (போயிங் 777 ரகம்) நடுவானில் மாயமானது. போதுமான ஆதாரம் இல்லாத போதும், விமானம் விபத்துக்கு உள்ளானதாகவும், அதில் பயணம் 239 பேரும் பலியாகி விட்டதாக கருதுவதாகவும் மலேசியா கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அறிவித்தது. இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளனதாகவும் நம்பப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவை சேர்ந்தவர்கள். எம்.எச். 370 விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்தவர்கள், இன்று சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள லாமா கோவிலில் கூடி அஞ்சலி செலுத்தினார்கள். கையில் ஊதுவத்திகள் ஏந்தியப்படி கண்ணீர் சிந்திய காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் கடத்தப்பட்ட கவர்னரின் மகன் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு..!!
Next post சேலம் அருகே வெடிச்சத்தம்: வீட்டுச் சுவர்களில் விரிசல்– ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது- பொதுமக்கள் பீதி…!!