டயானா கடிதம் வெளியீடு

Read Time:1 Minute, 18 Second

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக சாலை விபத்தில் உயிரிழந்த இளவரசி டயானா எழுதிய கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. கார் விபத்தில் உயிரிழந்த டயானாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிமன்றத்தில் இந்த கடிதம் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1996ம் ஆண்டு அக்டோபர் மாதம் டயானா இந்த கடிதத்தை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் இளவரசர் சார்லஸ் தம்மை கொலை செய்து விட்டு வேறு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று அஞ்சுவதாக டயானா குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை டயானா தனது சமையல்காரரிடம் கொடுத்து வைத்திருந்தார். இது பற்றி பால்பர்ரல் என்ற அந்த சமையல்காரர் கடந்த புத்தகத்தில் கடந்த 2003ம் ஆண்டு குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த கடிதம் முதல் முறையாக நேற்று முன்தினம் தான் வெளியிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிரஞ்சீவியை விமர்சிக்கும் ரோஜா
Next post கிருஷ்ணா நதியில் 3 1/2 கி.மீ. தூரம் நீந்தி சிறுமி சாதனை