திருப்பத்தூர் அருகே பெற்ற மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை கேரளாவுக்கு தப்பி ஓட்டம்..!!
மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி அருகே உள்ள வெள்ளாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 37). இவர் கேரளாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருப்பத்தூர் அருகே ஒழுகமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் திருமணமாகி 15 வயது உள்ள ஒரு மகள் உள்ளார்.
இந்தநிலையில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக பஞ்சவர்ணம் அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். தனது மகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால், நெற்குப்பை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக மகளை அழைத்து சென்றார்.
அவரை பரிசோதனை செய்த போது, சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியிடம் விசாரணையில் நடத்திய போது அவரது தந்தை மாணிக்கம் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இது குறித்து தாயார் பஞ்சவர்ணம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் வழக்கு பதிவு செய்து கேரளாவுக்கு தப்பி ஓடிய மாணிக்கத்தை தேடி வருகின்றார்.
Average Rating